திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாணந்துறை, கிலின வீதியை அண்மித்த பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான 10 மணித்தியாலங்கள் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment