வட பாகிஸ்தானில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது மூவர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைபர் பகதுன்கவா மற்றும் பலுசிஸ்தான் பிராந்தியங்களிலுள்ள கிராமங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கைபர் பகதுன்கவா மாகாணத்திலுள்ள சிட்ரல் நகர் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment