Thursday, August 6, 2015

கடாபியின் மகன் சிறையில் துஷ்­பி­ர­யோ­கம் : விசா­ரணை­.....



லிபிய முன்னாள் தலைவர் கேணல் கடா­பியின் மக­னான சாதி கடா­பியும் ஏனைய சிறைக்­கை­தி­களும் சிறைச்­சா­லையில் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோ காட்­சி­யொன்று தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அந்த வீடியோ காட்சி சிறைக் காவ­லர்கள் சாதி கடா­பியின் பாதங்­களில் அடிக்க அவர் வலி தாங்­காது கூச்­ச­லிடும் காட்­சியை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி வீடியோ காட்­சியில் தோன்றும் காவ­லர்­களை இனங்­கண்டு அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக லிபிய திரி­போலி நக­ரி­லுள்ள பொது விசா­ர­ணை­யாளர் கூறு­கிறார்.

கிளி­யர்­நியூஸ் இணை­யத்­த­ளத்தில் வெளி­யா­கி­யுள்ள இந்த வீடியோ காட்சி தொடர்பில் மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர்கள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

இத்­த­கைய சித்தி­ர­வ­தை­களை எந்த சூழ்­நி­லை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் மத்­திய கிழக்­கிற்­கான பணிப்­பாளர் ஜோ ஸ்ரோர்க் கூறினார்.
கேணல் கடா­பியின் பிறி­தொரு மக­னான சாயிப் அல் இஸ்­லா­மிற்கு 2011 ஆம் ஆண்டுகால மக்கள் எழுச்­சியின் போது இடம்­பெற்ற குற்­றச்­செ­யல்­க­ளுக்­காக கடந்த வாரம் மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சாயிப் அல் இஸ்லாம் முன்னாள் கிளர்ச்சிக் குழு­வொன்றால் ஸின்தான் நகரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். அந்தக் கிளர்ச்சிக் குழுவானது அவரை அரசாங்கத்திடம் கையளிக்க மறுத்து வருகின்ற நிலையிலேயே இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment