FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்...
உன்னை சுற்றி REQUEST தோன்றும்...
நட்பு அர்த்தப்படும்...
நாழிகையின் நீளம் குறையும்....
உனக்கும் கவிதை வரும்...
டைப்பிங்க் வேகமாகும்...
INTERNET தெய்வமாகும்...
உன் கைவிரல் பட்டே KEYBOADRS உடையும்...
கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்..
நித்திரை மறப்பாய்...
6 முறை LOG IN பண்ணுவாய்...
LOG OUT பண்ணினால் நிமிடங்களை வருடங்கள் என்பாய்...
LOG IN பண்ணினால் வருடங்களை நிமிடங்கள் என்பாய்...
காக்கை கூட உன்னை கவனிக்கும்...
ஆனால் யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என உணர்வாய்.
..
உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்
... இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்..
FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்
... இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும்.
.. EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும்.
.. உன் நண்பனே உனக்கு கலாய்த்து கமெண்ட் அடிப்பான்..
. FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய்
... அதற்காக மெயில் முகவரியை தேடுவாய்... பின் பாஸ்வேட்டை மாற்றுவாய்... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்... நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருக்க உன்னால் முடியுமா... சண்டையில் இம்சை அடைந்ததுண்டா... ஆளுகின்ற கொடுமை அடைந்ததுண்டா... உன்னையே உன்னால் மறக்க தெரியுமா... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்...
சின்ன சின்ன கமெண்ட்களில் சிலிர்க்க முடியுமே அதற்காக வேணும்... நட்பை மீண்டும் உருவாக்க முடியுமே ஆதற்காக வேணும்... நட்பென்ற சொல்லுக்கு அகராதியில் இல்லாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காக வேணும்... FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்... அப்பன் அடித்தாலும்... ஆத்தா ஏசினாலும்... மனைவி புலம்பினாலும்.... விழித்துப்பார்க்கையில் நீ நடுரோட்டில் நின்றாலும்... நீ நேசிக்கும் முகநூல் உன்னை நேசிக்க மறந்தாலும்... வாழ்வு சாவு இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்.

No comments:
Post a Comment