Wednesday, July 22, 2015

பந்து தாக்கி ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பிஞ்ச் காயம்



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் யார்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஒர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக விளையாடிய போது, வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ரஸ்செல் வீசிய பந்து, அவரது நெஞ்சில் பலமாக தாக்கியது. 

வலியால் துடித்த ஆரோன் பிஞ்ச் உடனடியாக வெளியேறினார். அப்போது ரத்த வாந்தியும் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

No comments:

Post a Comment