Saturday, July 25, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மாலைத்தீவு பயணம்





இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மாலைத்தீவிற்கு செல்லவுள்ளார்.

மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தமது விஜயத்தின்போது மாலைத்தீவுகள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யனின் அப்துல்லா கயூம் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

No comments:

Post a Comment