அட்லி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் விஜயின் 59 படத்தில் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்பாடலைப் பாடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவா’ படத்தை தொடர்ந்து விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ், இது இவரின் 50வது படமாகும்.
எனவே இசையில் பட்டையை கிளப்பவேண்டும் என்ற முடிவோடு சிரத்தையெடுத்து இசையமைத்து வருகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதலாம் திகதி தொடங்க உள்ளது. படம் தொடங்கும் முன்பே பாடல்களை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
இந்தப்படத்திற்காக தேனிசை தென்றல் தேவா ஒரு பாடலை பாட அதை பதிவு செய்தார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் அறிமுகப் பாடலை ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை பாட வைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் விருப்பத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
‘எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்று அழகிய தமிழ் மகன் படத்தில் அசத்தலாக அறிமுகப்பாடலை விஜய்க்காக பாடினார் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது 24 என்ற சூர்யா படத்திற்கு மட்டும் தான் தமிழில் இசையமைத்து வருகின்றார்.
விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் இப்படத்தில், சமந்தா, எமிஜாக்ஸன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை முதலாம் திகதி சென்னையில் தொடங்குகிறது.
No comments:
Post a Comment