Tuesday, July 21, 2015

வௌ்ளை வேன்கள் அனைத்தையும் சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனங்களாக மாற்றுவோம் – பிரதமர்

வௌ்ளை வேன்கள் அனைத்தையும் சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனங்களாக மாற்றுவோம் – பிரதமர்

வன்முறையற்ற ஒழுக்கமான தேர்தலொன்றை நடத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாத்தண்டியவில் நேற்று (16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
நல்லாட்சிக் கொள்கையை மீறி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என இதன்போது குறிப்பிட்ட பிரதமர், அவ்வாறானவர்களைக் காப்பாற்றப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்து, வௌ்ளை வேன்கள் அனைத்தையும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்களாக மாற்றுவோம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எத்தனோல, மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்தி ஒழுக்கமான அரசாங்கத்தை முன்னெடுப்போம் என பிரதமர் உறுதியளித்தார்.
   

No comments:

Post a Comment