Wednesday, July 22, 2015

தேர்தல் பணிகளில் இரண்டு இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

தேர்தல் பணிகளில் இரண்டு இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

எதிர்வரும் பாராளுமனற் தேர்லுக்காக இரண்டு இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
வாக்களிப்பு நிலைய பணிகளுக்காக ஒரு இலட்சத்தி 20 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்கு 75 ஆயிரம் அதிகாரிகள் நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 25,000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment