Wednesday, July 29, 2015

இந்தியாவிற்கு அழியாத புகழை பெற்று தந்த இரு கலாம்கள்! ஒருவர் அப்துல் கலாம் மற்றவர் அபுல் கலாம் !


இந்திய பெரு நாட்டை உயர்வின் உச்சிக்கு அழைத்து சென்றவர்களில் இரு கலாம்கள் முக்கியமானவர்கள் ஒருவர் அபுல் கலாம் மற்றவர் அப்துல் கலாம்

முன்னவர் சுதந்திர இந்தியவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையானாது

அது போல் தனி மனிதராக உழைத்து அவரது ஆய்வுகளில் பெற்ற வெற்றிகளின் மூலம் இந்தியாவிர்கு அழியாத புகழை தேடி தந்தவர் அப்துல் கலாம்

இந்தியாவிர்கு கனவாக இருந்த அணு கொண்டு தொழில் நுட்பத்தை ராக்ககெட் தொழில் நுட்பத்தை ஏவுகணை தொழில் நுட்பத்தை சாத்திய மாக்கி நடைமுறை படுத்தி 
இந்தியாவை வலிமை மிக்க நாடாக மாற்றியவர் அப்துல் கலாம்

அப்துல் கலாமின் இடத்தில் மற்றோருவர் இருந்திருந்தால் அவரது சிந்தனையை மேலைய நாடுகளுக்கு விலை பேசி கோடியில் புரண்டிருப்பார் மாடமாளிகைகளையும் கூட கோபரங்களையும் அமைத்திருப்பார்

ஆனால் அப்துல் கலாம் பொருளாசையை துறந்து நாட்டின் மீது பற்று கொண்டார் அந்த பற்றை மெய்படுத்தும் விதமாக நாட்டையே வலிமை மிக்க நாடாக மாற்றி காட்டினார்.

No comments:

Post a Comment