கொழும்பு – வௌ்ளவத்தை கடற்கரை வீதியின் EA குரே மாவத்தையிலிருந்து விவேகானந்தா மாவத்தை வரையான பகுதி இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளியேறும் வழித்தடத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புனரமைப்புப் பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வீதி மூடப்பட்டிருக்கும் இரு தினங்களிலும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment