Tuesday, July 21, 2015

அசாமில் சூனியக்காரி என்று குற்றம் சாட்டி பெண்ணின் தலையைத் துண்டித்த கிராம மக்கள்

அசாமில் சூனியக்காரி என்று குற்றம் சாட்டி பெண்ணின் தலையைத் துண்டித்த கிராம மக்கள்

பேய் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் 63 வயதுப் பெண் ஒருவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தின் சோனிட்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் உடல் நலக்குறைவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூர்ணி ஓரங் எனும் பேய் ஓட்டும் வேலைகளில் ஈடுபட்டு வந்த பெண் தான் அதற்குக் காரணம் என்று அங்குள்ள மக்கள் நினைத்தனர்.
இதனால் அவரை சூனியக்காரி என்று குற்றம்சாட்டி, நிர்வாணப்படுத்தி கொலைசெய்துள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக 2 பெண்கள் உட்பட ஏழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment