எகிப்தின் நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் மிக நீளமான நதியான நைல் நதியில் நேற்றிரவு (22) படகு ஒன்றில் 30 சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர்.
இதன்போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இத்தகவலை எகிப்தின் உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
ஜிசா என்ற பகுதியின் அருகே இவ்விபத்து நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment