Thursday, August 6, 2015

கடாபியின் மகன் சிறையில் துஷ்­பி­ர­யோ­கம் : விசா­ரணை­.....



லிபிய முன்னாள் தலைவர் கேணல் கடா­பியின் மக­னான சாதி கடா­பியும் ஏனைய சிறைக்­கை­தி­களும் சிறைச்­சா­லையில் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோ காட்­சி­யொன்று தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அந்த வீடியோ காட்சி சிறைக் காவ­லர்கள் சாதி கடா­பியின் பாதங்­களில் அடிக்க அவர் வலி தாங்­காது கூச்­ச­லிடும் காட்­சியை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி வீடியோ காட்­சியில் தோன்றும் காவ­லர்­களை இனங்­கண்டு அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக லிபிய திரி­போலி நக­ரி­லுள்ள பொது விசா­ர­ணை­யாளர் கூறு­கிறார்.

கிளி­யர்­நியூஸ் இணை­யத்­த­ளத்தில் வெளி­யா­கி­யுள்ள இந்த வீடியோ காட்சி தொடர்பில் மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர்கள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

இத்­த­கைய சித்தி­ர­வ­தை­களை எந்த சூழ்­நி­லை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் மத்­திய கிழக்­கிற்­கான பணிப்­பாளர் ஜோ ஸ்ரோர்க் கூறினார்.
கேணல் கடா­பியின் பிறி­தொரு மக­னான சாயிப் அல் இஸ்­லா­மிற்கு 2011 ஆம் ஆண்டுகால மக்கள் எழுச்­சியின் போது இடம்­பெற்ற குற்­றச்­செ­யல்­க­ளுக்­காக கடந்த வாரம் மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சாயிப் அல் இஸ்லாம் முன்னாள் கிளர்ச்சிக் குழு­வொன்றால் ஸின்தான் நகரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். அந்தக் கிளர்ச்சிக் குழுவானது அவரை அரசாங்கத்திடம் கையளிக்க மறுத்து வருகின்ற நிலையிலேயே இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


0

காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர்: உள்துறை அமைச்சு



நேற்று ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் இந்திய இராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார்.

அவரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது இந்திய அரசு..

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் உஸ்மான் எனவும் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் அறிவித்துள்ளது உள்துறை அமைச்சு.20 வயதுடைய உஸ்மான் உருது மற்றும் பஞ்சாப் மொழிகளை நன்கு பேசுவதாக தெரிவித்த உள்துறை அமைச்சு, உஸ்மான் பிடிபடும்போது அவன் கையில் ஏகே -47 வகைத் துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறியுள்ளது.

இதற்கிடையே உஸ்மானுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இன்னுமோர் தீவிரவாதி இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்,ஆனால் அவர் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

0

Wednesday, July 29, 2015

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்



கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0

உலகில் முதன் முதலாக இலங்கையில் நாடு முழுவதும் இலவச இண்டர்னெற்!



நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது.

அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது

-Al Mashoora-

0

பிரயாணப்பொதியில் பெண்ணின் சடலம்



கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொவரின் சடலத்தை பிரயாணப்பொதிக்குள் இருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையிலேயே இந்த சடலத்துடன் கூடிய பிரயாணப்பொதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

-TM-
0

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு




இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) 

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
0